2025 ஜூலை 17, வியாழக்கிழமை

87 கிலோகிராம் கஞ்சாவுடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 10 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

படகொன்றில் கஞ்சா கொண்டுவந்ததாகக் கூறப்படும் இருவர், யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கடலில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை  கடற்படையினரால்   கைதுசெய்யப்பட்டு தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக நெடுந்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இவர்களிடமிருந்து 87 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி பகுதிகளைச்  சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் கேரளாவிலிருந்து கடத்திவரப்பட்ட கஞ்சாவை இலங்கைக்கு கொண்டுவந்தபோது, சந்தேகத்துக்கிடமான முறையில் படகொன்று வருவதை அவதானித்த கடற்படையினர், அதனை 6 மைல் கடல் தூரத்தில் மறித்து சோதனையிட்டனர். இதன்போது,  படகின் கீழ்த்தளத்தில் கஞ்சா மறைத்துவைக்கப்பட்டிருந்தமை தெரியவந்ததாகவும் பொலிஸார் கூறினர்.  

சந்தேக நபர்களை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X