2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பெற்றோல் குண்டுகளுடன் கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்

Thipaan   / 2015 ஏப்ரல் 28 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா

சுன்னாகம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஞாயிற்றுக்கிழமை (26) இரவு இடம்பெற்ற கைகலப்புச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி, திங்கட்கிழமை (27) உத்தரவிட்டார்.

கைகலப்பில் ஈடுபட்ட போது, சுன்னாகம் பொலிஸார் முதலில் மூவரைக் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு மேலும் இருவரை திங்கட்கிழமை (27) கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பெற்றோல் குண்டுகள், வாள்கள், கோடரிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

இந்தக் குழு மோதலுடன் தொடர்புபட்ட மேலும் சிலர்; கைது செய்யப்படுவார்கள் என சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்;.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .