Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2015 ஏப்ரல் 30 , மு.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
கொள்ளையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளரை தலா 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் செல்ல யாழ். நீதவான்; பொ.சிவகுமார் புதன்கிழமை (29) அனுமதி வழங்கினார்.
கொள்ளையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்;டில் கடந்த 23ஆம் திகதி ஊடகவியலாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டனர்.
பல்கலைக்கழக மாணவர் மற்றும் மற்றைய நபரை கடந்த வழக்குத் தவணையின் போது பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும், மேற்படி ஊடகவியலாளர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே அவர் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago