2025 ஜூன் 28, சனிக்கிழமை

சிறுபான்மைக் கட்சிகள் பாதிப்புக்களை எதிர்நோக்க ஜனாதிபதி விடமாட்டார்:ஹக்கீம்

Princiya Dixci   / 2015 ஜூன் 22 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிறுபான்மைக் கட்சிகள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடன்படமாட்டார். இருந்தும் அவரைச் சூழவுள்ள சில கூட்டங்கள் தேர்தல் முறைமையை மாற்றிய எம்மை படுகுழியில் தள்ளுவதற்கு எத்தணிக்கின்றது என நகர அபிவிருத்தி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

யாழ். சிவன் பண்ணைப் வீதியில் 282 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட யாழ்.கிளிநொச்சி பிராந்திய தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கட்டடத் தொகுதிகளை இன்று திங்கட்கிழமை (22) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கூறுகையில்,

ஆட்சி மாற்றத்துக்கு பங்காற்றிய 3 கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இங்கு இருக்கின்றோம். ஆட்சி மாற்றத்தில் பங்காற்றியபோது, பெற்றுக்கொண்ட உறுதிமொழிகளை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள நாடாளுமன்ற ஆசனங்கள் பலம் சார்ந்த விடயத்தில் பிரச்சினையாகவுள்ளது. இந்த நாட்டில் வெளிப்படையான ஆட்சி இடம்பெறவேண்டும். கடந்த காலத்தில் வெளிப்படையான ஆட்சி இல்லை.

இதனை 19ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் கொண்டு வந்தோம். ஜனாதிபதி தனது அதிகாரங்களை குறைப்பதற்கு தானே முன்வந்தவர். அவரின் வெற்றிக்கு கைகொடுத்த கட்சிகளை அவர் கைவிடமாட்டார் என நாம் நம்புகின்றோம்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிறுபான்மைக் கட்சிகள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடன்படமாட்டார். இருந்தும் அவரைச் சூழவுள்ள சில கூட்டங்கள் தேர்தல் முறைமையை மாற்றிய எம்மை படுகுழியில் தள்ளுவதற்கு எத்தணிக்கின்றது. இது தொடர்பில் நாங்களும் ஜனாதிபதியும் முரண்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

ஆட்சி மாற்றத்தில் கைகோர்த்துள்ள நாங்கள், தற்போது எழுந்துள்ள இந்தப் பிரச்சினைக்கும் ஒன்றுபட்டுச் செயற்படவேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .