Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
George / 2015 ஜூன் 25 , மு.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
கடந்த 25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் மீளக்குடியேற பதிவுகளை மேற்கொண்ட பொதுமக்களுக்கு கொடுப்பனவு வழங்குவதற்காக மீள்குடியேற்ற அமைச்சில் இருந்து 29.95 மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ். மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச செயலக பிரிவில் வளலாய், வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை) பிரதேச செயலக பிரிவில் வயாவிளான் வடக்கு, பலாலி தெற்கு, வறுத்தலைவிளான், பளை, வீமன்காமம், கட்டுவன், மாவிட்டபுரம் ஆகிய பகுதிகளில் மீளக்குடியமர்வதற்கு பதிவுகளை மேற்கொண்டவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.
இந்தக் கொடுப்பனவுகள் இரண்டு கட்டங்களாக வழங்கப்படவுள்ளன.
முதற்கட்டமாக, காணி துப்பரவு செய்ய 5,000 ரூபாயும் உணவுப் பொருட்களுக்கு 5,000 ரூபாயும் காணி துப்பரவு செய்யும் உபகரணங்கள் கொள்வனவுக்கு 5,000 ரூபாயும் துப்பரவு செய்யப்பட்ட ஒரு பரப்புக்காணிக்கு 1,871 ரூபாய் எனவும் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.
இரண்டாம் கட்டமாக மீள்குடியேறிய பின்னர் 25 ஆயிரம் ரூபாயும் ஒருவருக்கு 450 ரூபாய் வீதம் 3 நாட்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago