2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வடமாகாணசபையின் கோரிக்கையை நிறைவேற்ற மதுவரித் திணைக்கள ஆணையாளர் நடவடிக்கை

Sudharshini   / 2015 ஜூன் 27 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாணசபையின் கோரிக்கையை நிறைவேற்ற மதுவரித் திணைக்கள ஆணையாளர் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வட மாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 09ஆம் திகதி வடமாகாண எல்லைக்குள் சட்டவிரோதமாக இயங்கும் மதுபானசாலைகளை மூடவேண்டும் எனவும் ஆலயங்கள், பாடசாலைகள், பொதுநிறுவனங்கள் போன்ற இடங்களுக்கு அருகாமையில் இயங்கும் மதுபான நிலையங்களுக்கான அனுமதியை மீளாய்வு செய்ய வேண்டும், புதிய அனுமதிப்பத்திரங்கள் வழங்ககூடாது என்ற தீர்மானம் வடமாகாணசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக கடந்த 10ஆம் திகதி நிதி அமைச்சருக்கு முகவரியிட்டு மதுவரித்திணைக்கள ஆணையாளருக்கு தீர்மானத்தின் பிரதியை அனுப்பியிருந்தேன்.

இந்நிலையில் கடந்த 19 ஆம் திகதி குறிப்பிட்ட விடயம் சம்பந்தமாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் சட்ட விதிகளுக்கு முரணாக இயங்கும் மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தால் விசாரணைகள் இடம்பெறும் எனவும் எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்தில் மதுபானசாலைகளுக்கு புதிய அரசாங்கத்தின் கொள்கைக்கு ஏற்ப அனுமதிகள் வழங்கப்படமாட்டாது எனவும் மதுவரித்திணைக்கள ஆணையாளர் கடிதம் அனுப்பியுள்ளார் என தெரிவித்தார்.
 

 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .