2025 ஜூன் 28, சனிக்கிழமை

குளத்து ஆமை பிடித்தவர்களுக்கு அபராதம்

Menaka Mookandi   / 2015 ஜூன் 29 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

காரைநகர் சிவகாமி அம்மன் ஆலயத்துக்கு அண்மையிலுள்ள வண்ணாரம் குளத்தில் ஆமைகள் பிடித்த இரண்டு பேருக்கு தலா 3,000 ரூபாய் அபராதம் விதித்து ஊர்காவற்றுறை நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் திங்கட்கிழமை (29) தீர்ப்பளித்தார்.

இருவரிடமிருந்து மீட்கப்பட்ட 2 கடலாமைகளையும் குளத்துக்குள் மீண்டும் விடுமாறு நீதவான் கூறினார்.

சுழிபுரத்தைச் சேர்ந்த இருவரும் ஞாயிற்றுக்கிழமை (28) மேற்படி குளத்தில் ஆமைகள் பிடித்த போது, ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .