2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

வித்தியின் தலைமையில் முன்னாள் போராளிகள் ஒன்றுகூடி ஆராய்வு

A.P.Mathan   / 2015 ஜூலை 01 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுத் தேர்தல் நெருங்கிவரும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முன்னாள் போராளிகளும் அவர்களது ஆதரவாளர்களும், நலன்விரும்பிகளும், ஜனநாயகக் கட்டமைப்பு ரீதியாக தாம் ஆற்றவிரும்புகின்ற - தாம் ஆற்றக்கூடிய  - பங்கு பணி குறித்து ஒன்றுகூடி ஆராயவிருக்கின்றனர்.

சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர் என்.வித்தியாதரனின் ஒருங்கிணைப்பில் வடமாகாணத்தில் உள்ள முன்னாள் சிரேஷ்ட போராளிகள் பலர் எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடுகின்றனர்.

தங்கள் தீர்மானம் குறித்து பெரும்பாலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளர் மாநாடு ஒன்று கூட்டி அவர்கள் பகிரங்கமாக அறிவிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .