2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

நீதி கோரி போராட்டம்

George   / 2015 ஜூலை 07 , பி.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறைச் சம்பவங்களுக்கு இதுவரையில் நீதி கிடைக்கவில்லை என்றும் அச்சம்பவங்களுக்கு நீதிகோரியும் நேற்று செவ்வாய்க்கிழமை (07) யாழ். மாவட்ட பெண்கள் அமைப்புக்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாணம், வேம்படி சந்தியில் இந்த போராட்டம் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டது. 

பெண்களுக்கெதிரான அடக்குமுறைகள், பெண்கள் சுதந்திரம் பறிக்கப்படுகின்றமை, பெண்களின் சுதந்திரத்துக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள், பெண்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகள், வன்புணர்வுகள் போன்றவற்றுக்கு நீதி கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .