2025 ஜூன் 26, வியாழக்கிழமை

ஏ – 9 வீதிக்கு இன்று பூட்டு

George   / 2015 ஜூலை 10 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ். மாவட்டச் செயலக பகுதியினுடாக செல்லும் ஏ – 9 வீதி இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரையில் மூடப்பட்டு இருக்கும் என்றும், அதற்கான மாற்று வீதிகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் யாழ். தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எவ்.யு.வூட்லர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் வியாழக்கிழமை (09) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில், யாழில் இருந்து வெளிச் செல்லும் வாகனங்கள் பழைய பூங்கா வீதி ஊடாக சுண்டுக்குளி சந்தியை அடைந்து கொழும்புதுறை வீதியினூடாக சென்று மாம்பழம் சந்தி வழியாக ஏ-9 வீதிக்கு செல்ல முடியும்.

யாழ்ப்பாணத்துக்கு உள்நுழையும் வாகனங்கள் ஏ - 9 வழியில் இருந்து புங்கன்குளம் சந்தியினூடாக திரும்பி கொழும்புத்துறை வீதியால் சென்று சுண்டுக்குளி சந்தியினூடாக பஸ்ரியன் சந்தியால் யாழ்; நகருக்குள் செல்ல முடியும் என்று கூறினார்.

யாழ்ப்பாணத்திலுள்ள முக்கிய கட்சிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சிகள் ஆகியன இன்று வேட்புமனுத்தாக்கல் செய்யவுள்ளமையால் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு இவ்வாறு வீதிகள் மூடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .