Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Sudharshini / 2015 ஜூலை 12 , மு.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்.பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறைச்சிக்கடைகள் மீது பொலிஸார் முன்னறிவித்தல் இன்றி அத்துமீறி நுழைந்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதை கண்டித்தும் கைது செய்யப்பட்ட மூவரை விடுதலை செய்ய கோரியும் இறைச்சிக்கடை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சனிக்கிழமை (11) கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்.பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள இறைச்சிக்கடைகள் மீது யாழ். பொலிஸார் சனிக்கிழமை (11) காலை திடீர் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
இந்த சோதனை நடவடிக்கையின் போது, அனுமதிப்பத்திரம் இல்லாது வெட்டுவதற்கு தயாராக இருந்த நான்கு மாடுகள், 104 கிலோ இறைச்சி என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டதுடன், மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
நாவாந்துறை, பாசையூர், அரியாலை, சின்னக்கடை மற்றும் பண்ணை பகுதிகளிலுள்ள 30 இறைச்சிக்கடைகளின் உரிமையாளர்களே இக்கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மூவரும் விடுதலை செய்யப்படும் வரையிலும் தமது போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
33 minute ago
56 minute ago
58 minute ago