2025 ஜூன் 23, திங்கட்கிழமை

வீதிகளில் சின்னங்கள், விருப்பிலக்கங்களை பொறித்தால் நடவடிக்கை

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 09 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் வர்ணப்பூச்சுக்களால் வீதிகள் மற்றும் வீட்டுச் சுவர்களில் கட்சிகளின் சின்னங்கள் மற்றும் வேட்பாளர்களுடைய விருப்பிலக்கங்களை பொறிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் என்.வேதநாயகன் எச்சரிக்கை விடுத்தார்.

யாழ். மாவட்டத்தில் தற்போது தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறி தமது பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக வர்ணப் பூச்சுக்களை பயன்படுத்தி வீதிகளிலும் வீட்டுச் சுவர்களிலும் தமது கட்சியின் சின்னங்கள், வேட்பாளர்களுடைய விருப்பிலக்கங்களை எழுதி வருகின்றனர். இவ்வாறு எழுதப்பட்டுள்ளவற்றை அழிக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள பொலிஸாருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று வேதநாயகன் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .