2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த பொருட்கள் மீட்பு

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 16 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழில் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட இருந்த வீட்டு சமையல் உபகரண பொருட்கள் ஒரு தொகுதி மீட்கப்பட்டுள்ளன என தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

அளவெட்டி, கும்பிளாவளை பிள்ளையார் கோவிலுக்கு பின்புறமாக உள்ள வீடொன்றில் இருந்தே குறித்த பொருட்கள் ஞாயிற்றுக்கிழமை (16) மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பொருட்கள் பெரியளவிலான 24 பெட்டிகளில் அடைக்கப்பட்டு வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்க என பதுக்கி வைக்கப்பட்டு இருந்த வேளையிலேயே பொலிஸாரால் அவை மீட்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .