2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

தீக்காயங்களுக்கு உள்ளான இளம் பெண் உயிரிழப்பு

George   / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

தீக்காயங்களுக்கு உள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்ப பெண், புதன்கிழமை (19) சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

உரும்பிராய் மேற்கு உரும்பிராய் பகுதியினை சேர்ந்த, யதீஸ் தமிழினி (வயது 22) என்ற நான்கு வயது குழந்தையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 16ஆம் திகதி இரவு மேசைக்கு மேல் வைக்கப்பட்ட குப்பி விளக்கு தவறுதலாக இவர் மீது விழுந்துள்ளது. இதனால் உடல் முழுவதும் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் இவர் யாழ். போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும், மேற்படி குடும்ப பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணைகளை யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .