2025 ஜூன் 21, சனிக்கிழமை

300 கடைகள் அமைக்க அனுமதி

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத் திருவிழாவின் போது ஆலயச் சூழலைச் சுற்றிலும் கடைகள் அமைக்க கொடுக்கும் அனுமதியானது, இம்முறை சுமார் 300 கடைகள் அமைப்பதற்கு கொடுக்கவுள்ளதாக யாழ்.மாநகர சபை ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் தெரிவித்தார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவம், கடந்த 19ஆம் திகதி முதல் ஆரம்பமாகி 25 தினங்களுக்கு நடைபெறவுள்ளது. மஹோற்சவ காலத்தில் ஆலய வளாகத்தில் கடைகள் அமைப்பதற்கான இடங்கள் வாடகைக்கு கொடுக்கப்படும்.

இடத்தின் பிரபல்யம், அளவு, வியாபாரத்தின் வகை ஆகியவற்றை கருத்திற்கொண்டு கடைகள் அமைப்பதற்கான இடத்துக்கான குத்தகைக் கட்டணம் அறவிடப்படும். ஆகக்குறைந்ததாக கச்சான் கடை அமைப்பதற்கு 10 ஆயிரம் ரூபாய் அறவிடப்படுகின்றது.

அதிகூடிய தொகையானது கடையின் இடத்தை ஏலத்துக்கு விடுவதன் மூலம் தீர்மானிக்கப்படும். தற்போது ஆலய சூழலில் 100 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கியமான திருவிழாக்கள் நெருங்கும் வேளையில் அதிகளவான கடைகள் அமைக்கப்படும். அந்தவகையில் 300 கடைகள் அமைக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .