2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

யாழ். மாவட்ட செயலகத்தின் 50ஆவது ஆண்டு நிறைவுவிழா

Thipaan   / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் 50ஆவது ஆண்டு நிறைவு விழா யாழ். மேலதிக மாவட்டச் செயலாளர் பா.செந்தில்நந்தனன் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்றது.

காலை 9 மணிக்கு மாவட்ட கொடி, தேசியக் கொடியேற்றப்பட்ட பின்னர் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் அரச அதிகாரிகளுடன் ஒன்றுகூடல் ஒன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரத்ததான நிகழ்வு நடைபெற்றது.

இரத்ததான நிகழ்வில் சுமார் 40 பேர் இரத்ததானம் வழங்கியதுடன், இரத்தங்களை யாழ் போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவினர் சேகரித்தனர். அரச உத்தியோகத்தராகவிருந்து அதிகளவு இரத்ததானம் வழங்கிய இரண்டு உத்தியோகத்தர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கட்டடம் 1965ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .