2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

500 ரூபா போலி நாணயத்தாளுடன் மூவர் கைது

Kanagaraj   / 2013 ஜூலை 16 , பி.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்த தங்கராசா

500 ரூபா போலி நாணயத்தாளுடன் வங்கி ஊழியர்கள் இருவர் உட்பட மூவர் யாழ்ப்பாணத்தில் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

வங்கி ஊழியர்கள் இருவருடமும் அவர்களது நண்பர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளையும் 500 ரூபாவையும் கொடுத்து மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருள் நிரப்பிவருமாறு அனுப்பிவைத்துள்ளார்.

வங்கி ஊழியர்களான நண்பர்கள் இருவரும் எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு சென்றபோதே அந்த நாணயத்தாள் போலியானது என்று கண்டுப்பிடிக்கப்பட்டதுடன் எரிபொருள் நிரப்பும் நிலையத்தைச்சேர்ந்த ஊழியர்கள் அவ்விருவரையும் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போதே அவருடைய நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .