2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

62 தொழில்நுட்ப ஆய்வு கூடங்கள் அமைக்க நடவடிக்கை

Kogilavani   / 2013 ஜூலை 15 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கே.பிரசாத்


மஹிந்தோதையத் திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் இவ்வருடம் 62 தொழில்நுட்;ப ஆய்வு கூடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடாமகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார்.

யாழ்.வசாவிளான் மகாவித்தியாலயத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற தொழில்நுட்ப பாட விதான அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை அவர் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

'நாட்டில் கன்னங்கர அவர்களினால் கொண்டுவரப்பட்ட இலவசக் கல்வியின் மூலம் பல இலட்சக் கணக்கான மாணவர்கள் நன்மையடைந்துள்ளனர். இந்த இலசவக் கல்வி முறையினால் இன்றும் பல மாணவர்கள் நன்மையடைந்து வருகின்றனர்.

மாணவர்களின் கல்வி நடவடிக்கையினை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கமைய நாடாளாவிய ரீதியில் அரசாங்கம் 1000 இடைநிலைப் பாடசாலைகளையும் 5000 ஆயிரம் ஆரம்ப நிலைப் பாடசாலைகளையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

இதில் ஆயிரம் பாடசாலை ஆபிவிருத்தி திட்டத்தில் வடமாகாணத்தில் 91 பாடசாலைகளும், 5ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 374 பாடசாலைகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

மகிந்தோதையத் திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் இவ்வருடம் 62 தொழில்நுட்;ப ஆய்வு கூடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதில் 28 தொழில்நுட்ப ஆய்வுகூடங்களும் 17 ஆய்வு கூடங்களும்; அமைப்பதற்கு கடந்த வாரம் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .