Editorial / 2017 நவம்பர் 05 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமூகத்தை நல்வழிப்படுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ள நவீன தொழில்நுட்பத்தை பிழையாக பயன்படுத்தும் சிலர் இன்று அரசாங்கம் தொடர்பில் பல்வேறு பிழையான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, சிறு பிரிவிரின் நடத்தைகளுக்கு மத்தியல் பெரும்பான்மையினருக்காக முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித்திட்டங்களை இடைநடுவே நிறுத்த முடியாது எனக் குறிப்பிட்டார்.
பொலன்னறுவை புத்தி மண்டபத்தில் இடம்பெற்ற பொலன்னறுவை மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதாரங்களை அபிவிருத்தி செய்வதற்காக 1012 பேருக்கு சுயதொழில் உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் (04) கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஜனநாயகம் மற்றும் சுதந்திரமான சூழலில் சிலர் இவ்வாறு செயற்படும்போதும் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் பொறுப்பேற்ற பணிகளை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
29 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
44 minute ago