2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம் பஸ் விபத்தில் 16 பேர் காயம்

Super User   / 2012 மே 12 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம். ஹிஜாஸ்)

புத்தளம் - அனுராதபுர வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 16 பேர் காயமடைந்தள்ளனர். குறித்த சிறிய ரக பஸ் கொழும்பு - வெல்லம்பிட்டியிலிருந்து அனுராதபுரம் நோக்கி சென்று கொண்டிருக்கையிலேயே புத்தளம் 6ஆம் மைல் கல்லில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் 3 சிறுவர்களும் உள்ளடங்குவர். காயமடைந்தவர்கள் புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சாரதியின் தூக்க மயக்கமே இவ்விபத்துக்கு காரணமாகவிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X