2025 மே 24, சனிக்கிழமை

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 41 பேர் கைது

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 06 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                     (ஹிரான் பிரியங்கர ஜயசேகர,எம்.என்.எம்.ஹிஜாஸ்)

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் செல்ல முயன்றதாகத் தெரிவிக்கப்படும் 41 பேர் வென்னப்புவ பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்காக வென்னப்புவ பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றில் தங்கியிருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து  கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

37 தமிழர்களும் 4 முஸ்லிம்களுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களெனவும் இவர்கள் திருகோணமலை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடமிருந்து கையடக்கத் தொலைபேசிகள், பணம், பயணப் பைகள் ஆகியனவும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர்கள் இன்று திங்கட்கிழமை வென்னப்புவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X