2025 மே 26, திங்கட்கிழமை

வாகன விபத்தில் 7 பேர் காயம்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 24 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆகில் அஹமட்,மொஹொமட் ஆஸிக்)

அநுராதபுரம் திரப்பனை பிரதேசத்தில்  இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதாகத் தெரிவித்த திரப்பனை பொலிஸார், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்று வானொன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்ததாகவும் கூறினர்.  

காயமடைந்தவர்களில் நான்கு பெண்கள் மற்றும் இரு குழந்தைகளும் அடங்குவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X