Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Kogilavani / 2011 ஒக்டோபர் 01 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
புத்தளம் மாவட்டத்தில் வறட்சி காரணமாக குடி நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள பிரதேசங்களுக்கு குடிநீர் விநியோகத்திற்காக அநர்த்த நிவாரண சேவைகள் திணைக்களத்திலிருந்து ஐந்து லட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட சமூக சேவைகள் அதிகாரி இர்பான் தெரிவித்தார்.
புத்தளம் மாவட்டத்தில் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் விபரம் திரட்டப்பட்டுள்ளதாகவும் அவற்றில் கருவெலகஸ்வௌ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 3 கிராம சேவையாளர் பிரிவிலுள்ள 1000 குடும்பங்களும் மஹாகும்பு கடவெல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 2 கிராம சேவையாளர் பிரிவிலுள்ள 600 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கு கடந்த 19ஆம் திகதி தொடக்கம் குடி நீர் வழங்கப்பட்டு வருவாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
7 hours ago
8 hours ago