2025 மே 26, திங்கட்கிழமை

முன்பள்ளி பாடசாலையிலிருந்து கைக்குண்டுகள் மீட்பு

Super User   / 2011 ஒக்டோபர் 18 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

 

கெப்பிட்டிகொல்லாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிமெட்டியாவ பகுதியிலுள்ள முன்பள்ளி பாடசாலையிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை இரு கைக்குண்டுகளை மீட்டுள்ளதாக கெப்பிட்டிகொல்லாவ பொலிஸார் தெரிவித்தனர்.

சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் குழுவொன்று முன்பள்ளி பாடசாலையினை துப்பரவு செய்துகொண்டிருக்கும் போதே கறுப்பு நிற பொலித்தீன் பையிலிருந்து குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு கைக்குண்டுகளும் இராணுவ குண்டு செயலிழக்க செய்யும் பிரிவின் உதவியுடன் செயலிழக்க செய்யப்பட்டுள்ளது.

இது தொடபான மேலதிக விசாரணைகளை கெப்பிட்டிகொல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X