2025 மே 26, திங்கட்கிழமை

புத்தளத்தில் இரண்டாம் கட்ட திவிநெகுமத் திட்டம்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 27 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் வீட்டு மனைப் பொருளாதார வேலைத்திட்டமான திவிநெகும திட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வுகள் புத்தளம் மாவட்டத்திலும் நடைபெற்றது.

இதற்கான நிகழ்வு புத்தளம் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கிழக்கு கிராம அலுவலக அதிகாரி பிரிவில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. புத்தளம்  நகரசபைத் தலைவர் கே.ஏ.பாயிஸ், வடமேல் மாகாணசபை உறுப்பினர் சிந்தக மாயாதுன்ன, நகரசபை பிரதித் தலைவர் குமார, உதவி அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்  மற்றும் அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில்  கலந்து கொண்டனர்.

சமுர்த்தி திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட 84 ஆயிரம் ரூபாவும் பயனாளியொருவரினால் சேர்க்கப்பட்ட 4 ஆயிரம் ரூபாவும் கொண்டு புதிய நாற்றுமேடையொன்றும் இன்று ஆரம்பித்து வைக்கப்படது. பயனாளிக்கு இலவச மாதுளைக்கன்றுகள், விதைகள் என்பனவும் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X