2025 மே 26, திங்கட்கிழமை

ஸஹிரா ஆரம்பப் பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் கூடுதல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கு பாராட்ட

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 02 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

2011ஆம் ஆண்டுக்கான தரம்  5  புலமைப்பரிசில் பரீட்சையில்  100  புள்ளிகளுக்கு  அதிகமான புள்ளிகளைப் பெற்ற  113  மாணவர்களையும்    புலமைப்பரிசில் பரீட்சையில்  சித்தியடைந்த  31  மாணவர்களையும் இவர்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரிகளையும் பாராட்டி கௌரவிக்கும் வைபவம் புத்தளம் ஸஹிரா ஆரம்பப் பாடசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பாடசாலை அதிபர்  எம்.எஸ்.எம். ஹில்மி  தலைமையில்  நடைபெற்ற  இந்த வைபவத்தில்  புத்தளம் நகரசபைத் தலைவர்  கே.ஏ.பாயிஸ்  பிரதம அதிதியாகவும்  வடமேல் மாகாணசபை உறுப்பினர் எஸ்.ஏ.எஹியா  கௌரவ அதிதியாகவும்  கலந்து  கொண்டனர்.

ஸாஹிரா ஆரம்பப் பாடசாலையில்  தரம்  5  புலமைப்பரிசில் பரீட்சையில்  ஆகக்கூடுதலாக   175  புள்ளிகளைப் பெற்ற  எம்.ஆர்.ஸக்காப் முஹம்மது என்ற மாணவனுக்கு மடிக்கணினி பரிசாக வழங்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X