Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 நவம்பர் 07 , மு.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆகில் அஹமட்)
ஹொரவ்பொத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்மன்னாகல பகுதியிலுள்ள தொல்பொருள் ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்ட காணியொன்றில் புதையல் தோண்டியதாகத் தெரிவிக்கப்படும் இருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதேசவாசிகள் வழங்கிய தகவலையடுத்து குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸ் குழுவினர், மேற்படி சந்தேக நபர்களை கைதுசெய்ததாக ஹொரவ்பொத்தான பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேக நபர்கள் பலர் புதையல் தோண்டிக்கொண்டிருந்தபோது அவ்விடத்திற்கு சென்ற பொலிஸார் அக்காணியை சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது சந்தேக நபர்கள் பலர் தப்பியோடியதாகவும் இருவரை மாத்திரமே கைதுசெய்ய முடிந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
இவர்கள் விட்டுச்சென்ற மோட்டார் சைக்கிளொன்று மற்றும் புதையல் தோண்ட பயன்படுத்திய ஆயுதங்களை கண்டெடுத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏனைய சந்தேக நபர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
25 May 2025