Menaka Mookandi / 2012 பெப்ரவரி 20 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கே.என்.முனாஷா, எஸ்.எம்.மும்தாஜ்)
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நீர்கொழும்பு மற்றும் சிலாபம் மீனவர்கள் இன்றைய தினம் கடற்றொழிலில் ஈடுபடாமல் விலகியிருந்தனர். இதன் காரணமாக நீர்கொழும்பு மீன் சந்தைகள் இன்று வெறிச்சோடி காணப்பட்டன.
எரிபொருள் தொடர்பாக தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை மீன்பிடி நடவடிக்கைகளில் இருந்து விலகியிருப்பதற்கு சில மீனவ சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் இருந்து விலகி உள்ளமையினால் நீர்கொழும்பு பிரதேசத்தில் மீன்பிடி படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருந்தது. அத்துடன் நகரில் மீனுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
இதேவேளை, கடந்த 13ஆம் திகதி முதல் மீனவர்கள் தொழிலுக்காக கடலுக்கு செல்லாமையினால் சிறியளவில் மீன் பிடித்தல் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் பெரும் பொருளாதார பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளதாக மீனவ பெண்கள் தெரிவித்தனர்.
.jpg)
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago