2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

முந்தல் சிறுமியை கடத்திய குற்றச்சாட்டு; சந்தேக நபர்கள் விளக்கமறியலில்

Super User   / 2012 பெப்ரவரி 25 , பி.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ், எஸ்.எம்.மும்தாஜ்)

மூன்றரை வயது சிறுமியை கடத்தி கப்பம் பெற முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குறித்த சிறுமியின் உறவினரையும் பெண்னொருவரையும் எதிர்வரும் மார்ச் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் நீதவான் நீதிமன்ற நேற்று சனிக்கிழமை உத்தரவிட்டார்.

புத்தளம், முந்தல் பிரதேசத்தை சேர்ந்த மூன்றரை வயது சிறுமி கடந்த புதன்கிழமை கடத்தி கப்பம் பெற முயன்ற சம்பவத்தின் கீழ் சிறுமியின் உறவினரெருவர் மற்றும் பெண்னொருவரையும் முந்தல் பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

இந்நிலையில், குறித்த சந்தேகநபர்களை இன்று புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே அவர்களை மார்ச் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X