2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

தலவிலயிலிருந்து இரு சடலங்கள் மீட்பு; தற்கொலை செய்தவர்கள் என சந்தேகம்

Menaka Mookandi   / 2012 மார்ச் 31 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

கற்பிட்டி, தலவில பகுதியில் இனம் தெரியாத இரு சடலங்கள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கற்பிட்டி பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலினையடுத்து தலவில பகுதிக்கு சென்ற கற்பிட்டி பொலிஸார் 50 வயது மதிக்கத்தக்க ஆணினதும் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணினதும் சடலத்தினை மீட்டுள்ளனர்.

உயிரிழந்துள்ள இருவரும் நஞ்சு அருந்தியிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X