2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் பலி; கிரிக்கெட் வீரர் ஜெஹான் முபாரக் கைது

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 22 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ். எம். மும்தாஜ், சுபுன் டயஸ், ஜுட் சமந்த)

சிலாபம் மைக்குளம் பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தொன்றையடுத்து இலங்கை கிரிக்கெட் வீரர் ஜெஹான் முபாரக் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் ஒருவர் பலியானதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபத்திலிருந்து  கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த கன்டர் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதியே இவ்விபத்து சம்பவித்தது. 

மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தும்மலசூரிய வத்துவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த பிரதீப் என்பவர்  இவ்விபத்தில் பலியான அதேவேளை, இதே பிரதேசத்தைச் சேர்ந்த மார்க் உதயகுமார்  என்பவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கன்டர் வாகனத்தை செலுத்திய இலங்கை கிரிக்கெட் வீரர் ஜெஹான் முபாரக்,   சிலாபம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்விபத்தில் படுகாயமடைந்த நபர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  பின்னர்  கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்விபத்து தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X