2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

புத்தளம் மாவட்டத்தில் மரமுந்திகை செய்கை அறுவடை ஆரம்பம்

Super User   / 2012 மே 14 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம் மாவட்டத்தில் மரமுந்திகை செய்கையின் அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  இம்மாவட்டத்தில் சுமார் 10,000க்கு மேற்பட்ட ஏக்கர் காணியில் மரமுந்திரிகை செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இவற்றுள் 500 ஏக்கர் விவசாயிகளுக்கு 9,000 ரூபா வீதம் அரசினால் மானியம் வழங்கப்பட்டு வருவதாக மரமந்திரிகை கூட்டுதாபன அதிகாரியொருவர் தெரிவித்தார்.

தற்போது புத்தளம் மாவட்டத்தில் ஒரு கிலோ கிராம் மரமுந்திரிகை சுமார் 200 ரூபா வரை தனியார் கம்பனிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த மரமந்திரிகை உற்பத்தி மூலம் புத்தளம் மாவட்டத்தில் பல்லாயிரம் கணக்கான குடும்பங்கள் வேலைவாய்ப்பினை பெற்றுள்மை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X