2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூரைத்தகடுகள் வழங்கல்

Super User   / 2012 மே 14 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)


புத்தளம் மாவட்டத்தில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் தெரிவு செய்யப்பட்ட 108 குடும்பங்களுக்கு கூரைத்தகடுகள் இன்று திங்கட்கிழமை வழங்கப்பட்டன.

அத்துடன் அனர்த்த காலங்களில் உணவு தயாரித்து வழங்குவதற்காக கேஸ், அடுப்பு, சட்டிகள், பானைகள் ஆகிய பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபைகளுக்கும் இதன்போது வழங்கப்பட்டன.

புத்தளம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே இப்பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் மஹிந்த அமரவீர, சிரேஸ்ட அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ, சிவில் விமானத்துறை அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர் என்டனி பெரேரா உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X