2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

கரையொதுங்கிய சடலம் தொடர்பான சந்தேக நபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Super User   / 2012 மே 15 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                       (ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் 9 ஆம் வட்டார கடற்கரையோரத்தில் கடந்த 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கரையொதுங்கிய ஆண் ஒருவரின் மரணம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் புத்தளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 8 பேரை தொடர்ந்தும்14 நாட்களுக்கு விளக்கமறியளில் வைக்கும்படி புத்தளம் மாவட்ட நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

புத்தளம் பொலிஸார்  8 பேரை கைது செய்து நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அவர்களை 14ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்கமாறு உத்தரவிட்டிருந்தார்.

அதே வேளை குறித்த சந்தேக நபர்களை மீண்டும் இன்று புத்தளம் மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்ட போது  சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கும்படி நீதவான் உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X