2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நாட்டின் அனல் மின் உற்பத்தி அதிகரிப்பு

A.P.Mathan   / 2014 ஜனவரி 09 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் அனல் மின் உற்பத்தி 70 வீதமாக அமைந்துள்ளதாகவும், செலவு குறைந்த நீர் மின் உற்பத்தி கணிசமான அளவு குறைவடைந்துள்ளதாகவும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
 
நாட்டின் நீரேந்து பிரதேசங்களில் காணப்படும் வரட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தியை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. 
 
பெருமளவான மின்சாரத்தை இலங்கை மின்சார சபைக்கு தனியார் மின்உற்பத்தி நிறுவனங்கள் விநியோகிப்பதாகவும், அவை எரிபொருள் மூலமாக மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .