2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழில் முதலாவது சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு அங்குரார்ப்பணம்

A.P.Mathan   / 2014 ஜனவரி 31 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன்
 
யாழில் முதலாவது சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு, ஏ-9 வீதி யாழ். மாவட்ட செயலகத்திற்கு அண்மையில் இன்று (31) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
 
'துளசிமஹால்' என்று அழைக்கப்படும் இக்கட்டிடம் 2 படுக்கையறைகளுடன் கூடிய 36 குடியிருப்புக்களை உள்ளடக்கி 6 அடுக்கு மாடியினைக் கொண்டுள்ளது.
 
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட தொழிலதிபர் தேசமான்ய கேன் பாலேந்திரா அடுக்குமாடி கட்டிடத்தினை வைபவ ரீதியாக திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்வில் சங்கென் கட்டிட ஒப்பந்த நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். 







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .