Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
George / 2016 ஜனவரி 02 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிலங்குளம் - அடம்பன் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பரப்புக்கடந்தான் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப்பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.ஆர்.சுமனசேகர, சனிக்கிழமை தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை(1) இரவு 8.10 மணியளவில் ஏற்பட்ட இவ் விபத்தில் பரப்புக்கடந்தான் கிராமத்தைச் சேர்ந்த ஜோசப்பு சந்தியோகு (வயது 51) எனும் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளதாவும் அவர் கூறினார்.
குறித்த குடும்பஸ்தர், அடம்பன் உயிலங்குளம் பிரதான வீதியூடாக சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது உயிலங்குளத்தில் இருந்து அடம்பன் பிரதான வீதியில் அதி வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்ப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் கடும் காயங்களுக்கு உள்ளான நிலையில், மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அவர்களில் ஒருவர், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம், மன்னார் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் வீதி போக்குவரத்துப்பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
22 minute ago
45 minute ago
2 hours ago