2025 ஜூன் 26, வியாழக்கிழமை

அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலான மீளாய்வு கூட்டம்

Kogilavani   / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களை பூரணப்படுத்தப்படுவதற்கான மீளய்வுக்கூட்டம் திங்கட்கிழமை(21) மாலை, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் மன்னார் மாவட்டச் செயலக ஜெய்க்கா மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வி, சுகாதாரம், குடி நீர், வீட்டுத்திட்டம், விவசாயம், மீன்பிடி, மீள் கட்டுமானப்பணிகள் தொடர்பில் ஆராயப்பட்டதோடு, குறித்த அபிவிருத்தி;திட்டங்கள் பூரணப்படுத்தப்படுதல் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மன்னார் மாவட்டத்தில் உள்ள மன்னார், நானாட்டான், மடு, மாந்தை மேற்கு, முசலி ஆகிய 5 பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களை பூரணப்படுத்தும் வகையில் இம் மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டத்தில் தேசிய ஒருங்கிணைப்பு அலுவலக இயக்குனர் எம்.எஸ்.ஜெயசிங்க, வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், மாவட்ட திட்டமிடல் அதிகாரி கே.சிறி பாஸ்கரன், உதவி மாவட்ட திட்டமிடல் அதிகாரி டி.ரி.சுதர்சன், பிரதேசச் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், மாதர், கிராம அபிவிருத்திச்சங்க பிரதிநிதிகள் என பலரும்; கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .