Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Niroshini / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இறுதி யுத்தத்தின் போது புதுமாத்தளன் – பொக்கணை பகுதியில் வைத்து காணாமல்போன கிளிநொச்சி – கனகாம்பிகைக்குளம் பிரசேத்தைச் சேர்ந்த சரவணமுத்து துவாரகா என்ற தனது மகள் அருட்சகோதரிகளின் பாதுகாப்பில் உள்ளதாக தாயொருவர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டையடுத்து, ஆணைக்குழுவின் மூன்று அதிகாரிகள் கிளிநொச்சி – உருத்திரபுரத்தில் அமைந்துள்ள கன்னியர் மடத்துக்கு தன்னுடன் இன்று செவ்வாய்க்கிழமை சென்றதாக குறித்த தாயார் தெரிவித்தார்.
காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நேற்று திங்கட்கிழமை கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டன.
இன்று இடம்பெற்ற இரண்டாம் கட்ட விசாரணைகளின்போது, குறித்த தாய் காணாமல்போன தனது மகள் உருத்திரபுரத்தில் அமைந்துள்ள கன்னியர் மடத்தில் இருப்பதாகவும் எனினும், மகள் அங்கு இல்லை என அருட்சகோதரிகள் தெரிவிப்பதாக ஆணைக்குழு அதிகாரிகளிடம் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
குற்றச்சாட்டை கவனத்திற்கொண்ட ஆணைக்குழு அதிகாரிகள் குறித்த தாயாருடன் 11.30 அளவில் கன்னியர் மடத்துக்குச் சென்றனர்.
எனினும் தனது மகள் என அந்த தாயாரால் அடையாளம் காணப்பட்ட பிள்ளையை அருகில் சென்று பார்வையிடுவதற்கு அருட்சகோதரிகள் அனுமதிக்கவில்லை என குறித்த தாய் தெரிவித்தார்.
அத்தோடு, குறித்த பிள்ளையைப் பார்வையிடுவதாயின் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று பார்வையிடவேண்டும் என அருட்சகோதரிகள் தெரிவித்ததாக தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
12 minute ago
35 minute ago
2 hours ago