2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

ஆபத்து மிகுந்த வீதியாகக் காணப்படும் ஏ - 32 வீதி

Niroshini   / 2016 மார்ச் 14 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

ஏ - 32 வீதி, பாதுகாப்பான வீதியாக இல்லாமல் இருப்பதால், யாழ்ப்பாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்வோர் இவ் வீதியைப் பயன்படுத்துவது குறைவாகக் காணப்படுவதாக வாகன சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தையும் மன்னாரையும் இணைத்துள்ள இந்த வீதியானது, ஏ - 9 வீதியால் செல்லும் தூரத்தைவிடக் குறைந்தளவு தூரத்தைக் கொண்ட வீதியாகவுள்ளது. இருந்தும், இந்த வீதியால் செல்லும் வாகனங்கள் குறைவாகக் காணப்படுகின்றன.

மேற்படி வீதியானது, பூநகரி வரையில் கடல் பிரதேசமாக வெட்டவெளியாகக் காணப்படுகின்றது. ஆள்நடமாட்டம் என்பது குறைவு. பூநகரியிலிருந்து மன்னாரை வரையிலும் இடைஇடையே காடுகள் காணப்படுகின்றன. இதனால் ஏற்படும் அச்சம் காரணமாக பலர் இந்த வீதியூடாக பயணிப்பதை தவிர்த்து வருகின்றனர்.

அத்துடன், இந்த வீதியில் விபத்து ஏற்பட்டால், விபத்தில் படுகாயமடைந்தவரை தூக்கிச் செல்ல யாரும் வரமாட்டார்கள். குறைவாக வாகனங்கள் பயணிப்பதும், தனிமையான இடங்களாக இருப்பதால் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தி படுகாயமடைந்தவரை காப்பாற்ற முன்வருதில்லை.

மேலும், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முழங்காவிலில் மாத்திரம் உள்ளது. அது கடந்தால் நீண்ட தூரத்துக்கு எந்தவித எரிபொருள் நிரப்பு நிலையங்களும் இல்லை.

அத்தடன், இரவு வேளைகளில் இந்த வீதியானது முற்றுமுழுதாக பாவிக்க முடியாத வீதியாகக் காணப்படுகின்றது. வழிப்பறி பயம், காட்டு மிருகங்களின் பயம் என்பனவும் காணப்படுகின்றது. இதனால் அதிக தூரம் பயணித்தாலும், ஏ - 9 வீதியை தாங்கள் அதிகளவு பயன்படுத்துவதாக வாகன சாரதிகள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X