2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஆரம்ப பாடசாலை வேண்டுமென கோரிக்கை

Kogilavani   / 2017 பெப்ரவரி 20 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, பூநகரியின் வேரவில் கிராமம் மற்றும் கிராஞ்சிக் கிராமத்துக்கு இடையில், ஆரம்ப பாடசாலை ஒன்றினை ஆரம்பிக்குமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக, பூநகரிக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் சு.தர்மரட்ணம் தெரிவித்தார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், “இரண்டு கிராமங்களுக்கிடையே ஐந்து கிலோமீற்றர் தூரம் உள்ளதுடன். கிராஞ்சி, வேரவில் பாடசாலைகளுக்கு மாணவர்கள் நடந்து செல்வதன் காரணமாக, இரு கிராமங்களுக்கும் இடையில் பாடசாலை ஒன்றினை ஆரம்பிக்குமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொன்னாவெளிப் பாடசாலை மூடப்பட்டுள்ளது. அப்பாடசாலையினை கிராஞ்சிக்கும் வேரவில்லுக்கும் இடையில் இயக்கலாம். அல்லது, புதிய பாடசாலை ஒன்றினை தொடங்கலாம் போன்ற சிபாரிசுகளை வலயக் கல்விப் பணிமனைக்கு அனுப்பியுள்ளேன்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .