2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

இந்திய மீனவர்களுக்கு மறியல்

Niroshini   / 2017 மார்ச் 04 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட இராமநாதபுரம் பாம்பன் மடு கிராமத்தைச் சேர்ந்த 5 மீனவர்களையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நேற்று உத்தரவிட்டார்.

இராமநாதபுரம் பாம்பன்மடு ஆரோக்கிய நகர் மற்றும் பிரான்சிஸ் நகர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 5 மீனவர்கள் இலுவைப்படகு ஒன்றின் மூலம் இலங்கை கடல் எல்லையினுள் அத்து மீறி நுழைந்து  வியாழக்கிழமை மாலை மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

இதன்போது கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் குறித்த மீனவர்களை கைது செய்த நேற்று வியாழக்கிழமை இரவு தாழ்வுபாட்டு கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.

தாழ்வுபாட்டு கடற்படையினர் குறித்த மீனவர்களிடம் விசாரனைகளை மேற்கொண்ட நிலையில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தள்ளனர்.

சார்ள்ஸ் அஸ்கரிஸ்(வயது-30), அருளானந்தம் அருள் கிரிஸ்தோபர்(வயது-26), ஜோசப் மெஸ்கரின்(வயது-30),அந்தோனி மரியரூபன்(வயது-23),அடைக்கலம் பிரகாஸ்(வயது-23) ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .