Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Kanagaraj / 2016 ஜனவரி 18 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21ஆம் திகதி கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் நால்வரையும் மன்னார் நீதிமன்றம், இன்று திங்கட்கிழமை விடுதலை செய்துள்ளது.
குறித்த 4 மீனவர்களின் விடுதலை குறித்து சட்டமா அதிபர் திணைக்ளத்தின் அனுமதி, இன்று திங்கட்கிழமை மன்னார் நீதிமன்றத்துக்கு கிடைக்கப்பெற்ற நிலையிலே குறித்த தமிழக மீனவர்கள் 4 பேரையும் மன்னார் நீதவான் ஆசிர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஜா விடுதலை செய்தார்.
குறித்த மீனவர்கள் 4 பேரும் மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் குறித்த மீனவர்களை இந்திய துனைத்தூதரக அதிகாரிகள் பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில் யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் சென்றுள்ளர்.
இதேவேளை, தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட நிலையில் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேலும் 15 இந்திய மீனவர்களை விடுதலை செய்ய அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறித்த மீனவர்கள் நாளை செவ்வாய்க்கிழமை மன்னார் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு விடுதலை செய்யப்படவுள்ளதாகவும் மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள உதவிப்பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
21 minute ago
44 minute ago
2 hours ago