2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

இந்திய மீனவர்கள் 5 பேர் கைது

Suganthini Ratnam   / 2017 மார்ச் 03 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து இழுவைப்படகில் மீன்பிடியில் ஈடுபட்ட குறச்சாட்டின் பேரில்  இராமநாதபுரம் பாம்பன்மடுக் கிராமத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் நேற்று வியாழக்கிழமை மாலை  கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர், குறித்த மீனவர்களை கைதுசெய்து, தாழ்வுபாட்டு கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். தாழ்வுபாடு கடற்படையினர் குறித்த மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .