2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

இளம் குடும்பஸ்தரை கழுத்தில் குத்தியவருக்கு விளக்கமறியல்

George   / 2015 நவம்பர் 13 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட் 

மன்னார் தாழ்வுபாட்டு கிராமத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இளம் குடும்பஸ்தர், உடைக்கப்பட்ட கண்ணாடி போத்தல் ஒன்றினால் குத்தப்பட்டு, படுகாயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை(5) இரவு இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், கடற்தொழிலில் ஈடுபடும் ஒரு பிள்ளையின் தந்தையான பர்ணாவாஸ் ஜேசுராஜா மீயைஸ்( வயது29) எனும் இளம் குடும்பஸ்தரே உடைக்கப்பட்ட போத்தலினால் குத்தப்பட்டு ஆபத்தான நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரும், அவருடைய இரண்டு நண்பர்களும் தாழ்வுபாட்டு கடற்கரைப்பகுதியில் வந்து கொண்டிருந்த போது, மது போதையில் தகராதில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தாழ்வு பாட்டு கிராமத்தை சேர்ந்த நபரொருவர் குறித்த இளம் குடும்பஸ்தரின் கழுத்துப்பகுதியில் உடைந்த போத்தல் ஒன்றினால் குத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் பொலிஸார், சந்தேக நபரை கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்துள்ளனர்.

அதன்போது, குறித்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை குறித்த நபர் மீது, மன்னார் நீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .