Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2016 மார்ச் 15 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
'இளைஞர், யுவதிகள் அரச வேலைகளை மட்டும் எதிர்பார்த்திருக்காது தமது கற்றல் நடவடிக்கைகளைத் தொழில் சார்ந்த துறைகளில் மேற்கொள்வதன் மூலம் சிறந்த உற்பத்தியாளர்களாகவும் பொருளாதாரத்தில் மேம்பட்ட நிலையை அடையக்கூடிய விதத்திலும் தம்மை மாற்றிக் கொள்ளலாம்' என வடமாகாண முசலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வடமாகாண விவசாயக் கண்காட்சி திங்கட்கிழமை(14) காலை, மன்னார் உயிலங்குளம் விவசாய பயிற்சி நிலையத்தில் இடம் பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
'சந்தையை நோக்கிய சூழல்; நேயமான விவசாயம்' எனும் கருப்பொருளுடன் கூடிய இந்த விவசாயக் கண்காட்சியை மன்னார் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் அமைத்திருப்பதன் மூலம் இப்பகுதி மக்கள் பயன்பெறுவார்கள் என எண்ணுகின்றேன்.
இரணைமடுக் குளம்,கட்டுக்கரைக்குளம் ஆகிய இரண்டு இராட்சதக் குளங்களின் கீழும் விவசாயம் செய்யப்படுகின்ற நெல்லின் அளவு, வட பகுதிமக்களின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கின்ற காரணத்தினால் இப்பகுதிமக்கள் உண்ணக்கூடியதும் அதிக விளைச்சலைக் கொடுக்கக்கூடியதுமான சிவப்பு நெல் இனங்களையும் விவசாயிகள் தெரிவு செய்யமுடியும்.
இது சந்தையைப் பொறுத்து எடுக்கப்பட வேண்டிய தீர்மானமாகும்' என்றார்.
'விவசாய நடவடிக்கைகள் சந்தை வாய்ப்புக்களைக் கொண்டதாகவும் அதே நேரம் சூழலை மாசுபடுத்தாத முறைமையிலும் மேற்கொள்ளப்படுதல் அவசியம்.
விவசாய நடவடிக்கைகளின் போது முறையற்ற விதத்தி பயன்படுத்தப்படும் அதிகளவு 'யூரியா' தேவைக்கு அதிகமாகி நிலத்தடி நீரில் கலந்து கொண்டு நீரின் 'நைத்திரேற்று' அளவுகளை அதிகரிக்கச் செய்து விடுகின்றது. இந்த நீரை நாம் தொடர்ந்து பருகி வருகின்ற போது எமது உடலில் பாரிய தாக்கங்களை அந்தநீர் ஏற்படுத்துகின்றது. எனவே செயற்கை உரப்பாவனைக்குப் பதிலாக இயற்கைக் கூட்டுப்பசளைகளை நாம் கூடுதலாகப் பயன்படுத்த வேண்டும்.
எந்த விவசாயப் பொருட்களை எடுத்தாலும் அவை மக்களின் உடல் நலத்துக்கு ஊறுவிளைவிப்பனவாக இல்லாமல் ஊட்டச் சத்துகளை வழங்கக்கூடியனவாக இருக்கத்தக்க வகையில் உற்பத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago