2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சாவுடன் இருவர் கைது

George   / 2017 பெப்ரவரி 28 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

வவுனியா, பரசங்குளம் பகுதியில் வைத்து, 31.6 கிலோகிராம் கஞ்சா போதைபொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்துள்ளதாக, புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, வவுனியா, பரசங்குளம் பகுதியில் வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த  கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன், கைதுசெய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும், வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக, புளியங்குளம் பொலிஸார் மேலும் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .