2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கடற்படையினர் கடமை தவறியதாலேயே இந்திய மீனவர் எல்லை தாண்டுகின்றனர்

Kogilavani   / 2016 ஜனவரி 05 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவுக்கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த முல்லைத்தீவைச் சேர்ந்த இரு மீனவர்களின் படகை இந்திய ரோலர் மோதி மூழ்கடித்த சம்பவமானது, கடற்படையினரின் கடமை தவறிய செயற்பாடுகளை காட்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்காந்தராசா தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை (04) காலை இடம்பெற்ற இச்சம்பவத்தினால் முல்லைத்தீவைச் சேர்ந்த இரு மீனவர்களும் கடலில் தத்தளித்த நிலையில் இருந்துள்ளனர். இதன்போது, அங்கு சென்ற முல்லைத்தீவைச் சேர்ந்த ஏனைய  மீனவர்கள் அம்மீனவர்களை; மீட்டதுடன், அவர்களின் படகை வேண்டுமென்றே மோதிய இந்திய றோலரை மடக்கிப் பிடித்ததுடன், அதில் இருந்த 8 இந்திய மீனவர்களையும் பிடித்துக் கரைக்குக் கொண்டு வந்தனர்.

இச்சம்பவத்ததால், சேகர் ரஞ்சித்குமார் என்பவர் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்பிடிப்படகு மற்றும் வலைகள் உள்ளிட்ட உபகரணங்களை முற்றாக இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீஸ்காந்தராசா,

'இந்திய மீனவர்களின் அத்துமீறிய இச்செயற்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுவதற்கு இலங்கை கடற்படையினரின் கடமை தவறிய நிலையே காரணமாகும்.

குறிப்பாக முல்லைத்தீவு கடற்பரப்பிலிருந்து 5 கடல் மைல் தூரம் வரை இந்திய மீனவர்களின் ரோலர் படகு வரும்வரை கரையோரத்தை பாதுகாக்கும் பணியிலீடுபட்டுள்ள கடற்படையினர் எங்கே போனார்கள்?

திட்டமிடப்பட்டு எமது கடல் வளங்கள் அழிக்கப்படுகின்றமைக்கு  கடற்படையினரின் கடமை தவறிய செயற்பாடுகளே காரணமாகும்.  இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீட்டை பெற்றுகொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என அவர் கோரினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X