2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கடலுக்கு சென்ற மீனவர்களின் படகு மீட்பு

George   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார், சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு கடலில் மீன்பிடிப்பதற்காக கடந்த 27ஆம் திகதி அதிகாலை படகொன்றில் சென்ற இரண்டு மீனவர்கள் மாயமாகியுள்ளதாகவும் அவர்களின் படகு, பருத்தித்துறைக்கு தாளையடிக்கும் இடைப்பட்ட 28 கடல்மைல் தூரத்தில் வியாழக்கிழமை (28) மீட்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத்தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா தெரிவித்தார்.

'திருகோணமலை நாவற்சேனை, கும்புறுபிட்டியைச் சேர்ந்த 22 வயதுடைய உலகநாதன் குமரேஸ், திருகோணமலையைச் திருக்கடலூரைச் சேர்ந்த 23 வயதுடைய மோகனதாஸ் சயந்தன் ஆகிய இரு கடற்றொழிலாளர்களே இவ்வாறு காணாமற்போனார்கள்.

27ஆம் திகதி அதிகாலை கடலுக்குச் சென்ற இவர்கள் இரவு 8 மணிக்கு கரை திரும்பியிருக்கவேண்டும். ஆனால், அவர்கள் திரும்பாததையடுத்து, தேடுதல் நடத்தப்பட்டு படகு மட்டும் மீட்கப்பட்டது.

இன்று வெள்ளிக்கிழமையும் (29) தேடுதல் தொடர்ந்து நடைபெறுகின்றது. 3 கடற்படையினரின் படகுகளும், 7 மீனவர்களின் படகுகளும் தேடுதலில் ஈடுபட்டுள்ளன' என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X