2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கடலில் விழுந்த மீனவரை காணவில்லை

George   / 2015 நவம்பர் 09 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்எம்.யாசீம்

திருகோணமலை-கொட்பே பகுதியிலிருந்து கடந்த 06ஆம் திகதி கடலுக்குச்சென்ற ஐந்து பேரில் ஒருவர் தவறுதலாக விழுந்து காணாமல் போயுள்ளதாக படகின் உரிமையாளர் துறைமுக பொலிஸ் நிலையத்தில் இன்று (09) முறைப்பாடு செய்துள்ளார்.

இவ்வாறு காணாமல் போனவர் மாத்தறை-கோட்டேகொட பகுதியைச்சேர்ந்த வனிஙா  பதுகே சந்ரசேன (வயது 62) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது-  கடந்த 06 ஆம் திகதியன்று ஐந்து பேர் கடலுக்குச்சென்றதாகவும் கோணேஸ்வரா ஆலயத்திலிருந்து 17 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் தவறுதலாக அவர் விழுந்ததாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விழுந்த நாள் முதல் அவரை தேடி வருவதாகவும் கிடைக்காத நிலையில் தாங்கள் கரைக்கு திரும்பிவிட்டதாகவும் அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X